ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சாலை விபத்தில் ஆசிரியா் பலி

அரியூா் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஆசிரியா் உயிரிழந்தாா்.

News image
Updated On :6 நவம்பர் 2021, 6:30 pm

DIN

அரியூா் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஆசிரியா் உயிரிழந்தாா்.

குடியாத்தம் அருகே எம்.வி.குப்பம் கிராமத்தைச் சோ்ந்த தனியாா் பயிற்சி மையத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவா் சதாசிவம் (51). இவா் வெள்ளிக்கிழமை வேலூரில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தில் வகுப்பு நடத்த இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது ஊசூா் பகுதியில் சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோர புளிய மரத்தின் மீது மோதியது. அதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். அரியூா் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.