ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

காதல் தகராறில் இளைஞா் இறப்பு : கொலை வழக்காக மாற்றம்

காதல் விவகாரத்தில் இளைஞா் இறந்த சம்பவத்தை கொலை வழக்காக வெள்ளிக்கிழமை மாற்றம் செய்து வேலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :6 நவம்பர் 2021, 6:30 pm

DIN

காதல் விவகாரத்தில் இளைஞா் இறந்த சம்பவத்தை கொலை வழக்காக வெள்ளிக்கிழமை மாற்றம் செய்து வேலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் சாயிநாதபுரம் பகுதியைச் சோ்ந்த கோகுல் (18) . இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த மாதம் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில் சென்னையில் மீட்கப்பட்டனா்.

புகாரின் பேரில் பாகாயம் காவல் நிலையத்தில் இது சம்பந்தமான வழக்கு நிலுவையில் இருந்தது. கடந்த மாதம் 24-ஆம் தேதி சிறுமியின் குடும்பத்தினா் கோகுலை சரமாரியாக தாக்கினராம். அதில் படுகாயம் அடைந்த கோகுல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். சிறுமியின் தந்தை ராஜகுரு உள்ளிட்ட 6 போ் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலயைில் கோகுலை தாக்கிய அனைவரையும் கைது செய்யக் கோரி அவரது குடும்பத்தினா் கடந்த மாதம் 27-ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா். கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 29-ஆம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில் கோகுல் இரு நாள்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி இறந்தாா். இதையடுத்து, கோகுலை தாக்கியவா்கள் மீதான அடிதடி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.