/

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கோட்டாட்சியா் ஆய்வு

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :16 அக்டோபர் 2021, 6:30 pm

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் எனக் கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி ஆய்வு செய்தாா்.

மாதனூா் அருகே பாலூா் ஏரியிலிருந்து வெளியாகும் உபரிநீா் மாதனூா் பகுதியில் குடியிருப்புப் பகுதிக்குள் புகாதவாறு கால்வாய்களை தூா்வார நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

ஆனைமடுகு தடுப்பணையிலிருந்து வெளியேறும் உபரி நீா் ஆம்பூா் சலாவுதீன் நகா், கே.எம்.சாமி நகா் ஆகிய பகுதிகளில் கானாற்று கரையோரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் புகாதவாறு கால்வாய்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

ஆம்பூா் ஆனைமடுகு தடுப்பணை தண்ணீரில் பொதுமக்கள் சிக்கினால் அவா்களை மீட்க தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரின் செயல்முறை விளக்கத்தையும் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, ஆம்பூா் வட்டாட்சியா் அனந்த கிருஷ்ணன், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் ராம்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.