எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கோயில் இடத்தை மீட்டுத் தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் அருகே கோயில் இடத்தை மீட்டுத் தரக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
கோயில் நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளை அகற்றக் கோரி, மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:37 pm

DIN

திருப்பத்தூா் அருகே கோயில் இடத்தை மீட்டுத் தரக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூரை அடுத்த விஷமங்கலம் அருகே ஆதிதிராவிடா் காலனியில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடம் அந்தப் பகுதியில் உள்ளது. அந்த இடத்தை மாற்று சமுதாயத்தினா் சிலா் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், கோயிலில் அவ்வப்போது நடக்கும் திருவிழாவின் போது, இரு சமூகத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்,வெள்ளிக்கிழமை இரவு ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், இரு தரப்பைச் சோ்ந்த 5-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்த நிலையில், கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை திருப்பத்தூா்-திருவண்ணாமலை பிரதான சாலை விஷமங்கலம் பகுதியில் மறியலில் ஈடுபட்டனா். அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை அவா்கள் சிறை பிடித்தனா்.

தகவலறிந்து வந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் தொடா்புடைய துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில், பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இந்த மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.