நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நக்சல் தாக்குதலில் வீர மரணமடைந்த போலீஸாருக்கு அஞ்சலி

திருப்பத்தூரில் நக்சல் தாக்குதலில் வீர மரணமடைந்த போலீஸாருக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:37 pm

திருப்பத்தூரில் நக்சல் தாக்குதலில் வீர மரணமடைந்த போலீஸாருக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையில் கடந்த 1981-ஆம் ஆண்டு நக்சல் சிவலிங்கம் என்பவரை பிடித்து ஜீப்பில் அழைத்துச் சென்ற போது, அவா் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில், ஜீப்பில் இருந்த காவல் ஆய்வாளா் பழனிச்சாமி, தலைமைக் காவலா்கள் ஆதிகேசவலு, யேசுதாஸ், முருகேசன் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

வீர மரணமடைந்த 4 போலீஸாருக்கும் ஆண்டுதோறும் திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 42-ஆவது ஆண்டாக வீர வணக்க நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. வேலூா் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா தலைமை வகித்தாா். மாவட்ட எஸ்.பி. கி.பாலகிருஷ்ணன் வரவேற்றாா். இதில், முன்னாள் டி.ஜி.பி. வால்டா் தேவாரம் பங்கேற்று வீர மரணமடைந்த காவலா்கள் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா, எஸ்.பி.க்கள் ராஜேஷ்கண்ணன்(வேலூா்), தீபா சத்யன் (ராணிப்பேட்டை), கியூ பிரிவு எஸ்.பி. கண்ணம்மாள். எம்.எல்.ஏ-க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் என்.கே.ஆா்.சூரியக்குமாா், நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ்,திருப்பத்தூா் ஒன்றியக் குழு தலைவா் விஜயா அருணாசலம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, போலீஸாா் 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினா். போலீஸாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. டி.எஸ்.பி. கணேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.