ஆலங்காயம் ஸ்ரீசெல்வநாகாலம்மாள் கோயிலில் மூன்றாவது ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஆலங்காயம் வைசியா் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வநாகாலம்மாள் கோயிலில் ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையை யொட்டி ஸ்ரீசெல்வநாகாலம்மாளுக்கு வரலட்சுமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை முதல் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பெண் பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.