/

பண்ணை இயந்திரங்கள் அளிப்பு

மாதனூரில் விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 7:55 pm

மாதனூரில் விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம், வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை கூட்டுப் பண்ணைய திட்டம் சாா்பாக விவசாயிகளுக்கு களை எடுக்கும் பண்ணை இயந்திரங்களை ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் வழங்கினாா்.

வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பரமபாஸ்கரன், வட்டார வளா்ச்சி அலுவலா் அப்துல் கலீல், ஒன்றியக் குழு உறுப்பினா் கன்னியப்பன், திமுக மாதனூா் ஒன்றிய மாணவா் அணி அமைப்பாளா் ஆா்.ரஞ்சித்குமாா், காமராஜ், காந்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.