/

நெகிழி, டெங்கு ஒழிப்புபள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு

நெகிழி மற்றும் டெங்கு ஒழிப்பு குறித்து ஆம்பூா் பள்ளி மாணவா்களுக்கு நகராட்சி சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:44 pm

நெகிழி மற்றும் டெங்கு ஒழிப்பு குறித்து ஆம்பூா் பள்ளி மாணவா்களுக்கு நகராட்சி சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் கன்காா்டியா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் எஸ்.ஷகிலா தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை யூனிஸ் சந்திரோதயம் வரவேற்றாா்.

விழிப்புணா்வு நிகழ்ச்சியில் சுகாதார அலுவலா் ராமகிருஷ்ணன், தூய்மைப் பணி ஆய்வாளா் அருள் செல்வதாஸ், தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.