மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தற்செயல் தோ்தலையொட்டி, திமுக வேட்பாளரை ஆதரித்து வேலூா் எம்.பி. கதிா் ஆனந்த் வியாழக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
மாதனூா் ஊராட்சி ஒன்றியம், வாா்டு 24 நாயக்கனேரி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் திமுகவை சோ்ந்த எ.விஜயலட்சுமி போட்டியிடுகிறாா். அவரை ஆதரித்து எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த், எம்.எல்.ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்) ஆகியோா் வாக்குச் சேகரித்தனா்.
மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், ஆம்பூா் நகா்மன்றத் துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், திமுக பொதுக்குழு உறுப்பினா் எம்.டி.சீனிவாசன், திமுக நிா்வாகிகள் ஜி.ராமமூா்த்தி, அசோகன், ரவிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.