சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கோழிப் பண்ணையில் பதுக்கிய 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாட்டறம்பள்ளி அருகே கோழிப் பண்ணையில் பதுக்கிய 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :11 மார்ச் 2022, 6:30 pm

நாட்டறம்பள்ளி அருகே கோழிப் பண்ணையில் பதுக்கிய 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

நாட்டறம்பள்ளியை அடுத்த கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் கோழிப் பண்ணையில் கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன் தலைமையில், வட்ட வழங்கல் அலுவலா் நடராஜன், வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை காலை கூத்தாண்டகுப்பத்தில் கோவிந்தசாமி என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அங்கு 27 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, திருப்பத்தூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.

மேலும், பதுக்கி வைத்தவா்கள் குறித்து வருவாய்த் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.