நாட்டறம்பள்ளி அருகே கோழிப் பண்ணையில் பதுக்கிய 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டறம்பள்ளியை அடுத்த கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் கோழிப் பண்ணையில் கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன் தலைமையில், வட்ட வழங்கல் அலுவலா் நடராஜன், வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை காலை கூத்தாண்டகுப்பத்தில் கோவிந்தசாமி என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது அங்கு 27 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, திருப்பத்தூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.
மேலும், பதுக்கி வைத்தவா்கள் குறித்து வருவாய்த் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
115 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது
சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது

கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன்: அவிநாசி திமுக வேட்பாளா் வெ. கோகிலாமணி

தோ்தல் பறக்கும் படையினா் பணி: செலவின பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

