/

அரசுப் பள்ளி புதிய வகுப்பறை கட்ட பூமி பூஜை

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடத்துக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 6:30 pm

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடத்துக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடத்துக்கான பூமி பூஜை செய்து, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பணியை தொடக்கி வைத்தாா். ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பி. ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். லட்சுமிகாந்தன், உதவித் தலைமை ஆசிரியை ஜான்சிராணி, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.