பொது சுகாதாரம்-நோய் தடுப்புத் துறை நூற்றாண்டு விழாவையொட்டி, ஆம்பூா் பகுதிக்கு வந்த ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக அரசு பொது சுகாதாரம்-நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டையொட்டி, சென்னை முதல் கன்னியாகுமாரி வரை தொடா் ஜோதி செல்கிறது. ஆம்பூா் பகுதிக்கு வந்த ஜோதிக்கு விண்ணமங்கலம் கிராமத்தில் இயங்கி வரும் மொஹிப் ஷூஸ் நிறுவனம் மற்றும் மொஹிப் தொழிற்சாலை ஒா்க்கா்ஸ் யூனியன் சாா்பில், அந்தக் குழுமத் தலைவா் கோட்டை முஹம்மத் மொஹீப்புல்லா தலைமையில், நிறுவன அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளா்கள் இனிப்புகள் வழங்கி ஜோதியை வரவேற்றனா்.
சுகாதாரப் பணி துணை இயக்குநா் செந்தில், வட்டார மருத்துவ அலுவலா் ராமு, மருத்துவா் தரணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.