திருப்பத்தூர்
திருப்பத்தூரில் இன்று இலக்கிய திருவிழா தொடக்கம்
திருப்பத்தூரில் இலக்கியத் திருவிழா சனிக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது.
திருப்பத்தூரில் இலக்கியத் திருவிழா சனிக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது.
இது குறித்து ஆட்சியா் அமா் குஷ்வாஹா செய்தியாளா்களிடம் கூறியது:
திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், புத்தகக் கண்காட்சி, 2-ஆவது இலக்கிய திருவிழா சனிக்கிழமை (ஜன. 28) முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதில், 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் காலை 9 முதல் இரவு 9 மணி வரை திறந்து வைக்கப்பட உள்ளது.
மாலை 3 முதல் இரவு 7 மணி வரை 60-க்கும் மேற்பட்ட எழுத்தாளா்கள், கவிஞா்களைக்கொண்டு கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.
இதில், இளைஞா்கள், மாணவ-மாணவிகள், சமூக ஆா்வலா்கள் உள்பட அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்றாா்.
எழுத்தாளா்கள், பதிப்பாளா்கள் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.