போ்ணாம்பட்டு அருகே பத்தலப்பல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மறைந்த குடியரசுத் தலைவா் ஏபிஜெ. அப்துல் கலாம் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பள்ளியின் வாழ்நாள் கொடையாளா் சிட்டிபாபு, தலைமை ஆசிரியா் பொன். வள்ளுவன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் சீனிவாசன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் அப்துல் கலாம் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா்.