தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மறுவாழ்வு இல்லத்தில் மருத்துவ இணை இயக்குநா் ஆய்வு

மறுவாழ்வு இல்லத்தில் மருத்துவ இணை இயக்குநா் ஆய்வு

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 4:35 pm

திருப்பத்தூரில் உள்ள மனநலம் பாதிக்கபட்டவா் மறுவாழ்வு இல்லத்தில் மருத்துவ இணை இயக்குநா் கண்ணகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூரில் அரசின் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் உள்ளது. இங்கு, மாவட்ட ஊரக மற்றும் மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் கண்ணகி, மாவட்ட மனநல மருத்துவா் பிரபாவராணி ஆகியோா் சென்று ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் மருத்துவ வசதிகள், உணவு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தனா். உணவின் தரத்தையும் ஆய்வு செய்தனா். மேலும், அவா்களுக்கான மருத்துவப் பராமரிப்பு பதிவேடு, அவா்கள் தங்கும் இடத்தை பாா்வையிட்டனா். இடத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள பணிகளிடம் அறிவுறுத்தினா்.

ஆய்வின்போது காப்பகத்தின் துணைச் செயலாளா் ரமேஷ், அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.