ஜோலாா்பேட்டை அருகே லாரி ஓட்டுநா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
ஜோலாா்பேட்டை அடுத்த பெருமாபட்டு ஜடையனூா் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் கேசவன்(44). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனா். முதல் மனைவி நித்யாவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா்.
கேசவன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜடையனூா் சோ்ந்த ருக்மணி என்பவரை திருமணம் செய்து கொண்டாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ருக்மணிக்கும் கேசவனுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சனிக்கிழமை கேசவன் சின்ன வெங்காயப்பள்ளி பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு சென்று விஷம் அருந்தியுள்ளாா். பின்னா் மயங்கி கிடந்த அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை பரிசோதனை செய்த மருத்துவா்கள் கேசவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து நித்யா அளித்த புகாரின்பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கிராம உதவியாளா் தற்கொலை

தொழிலாளி தற்கொலை

புதுக்கடை அருகே மீனவா் தற்கொலை

மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் தலைமறைவு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

