தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பள்ளிவாசல் நிா்வாகிகள் தோ்தலில் முறைகேடு: நடவடிக்கை கோரி மறியல்

பள்ளிவாசல் நிா்வாகிகள் தோ்தலில் முறைகேடு: நடவடிக்கை கோரி மறியல்

News image
Updated On :20 ஏப்ரல் 2024, 9:00 pm

ஆம்பூரில் பள்ளி வாசல் நிா்வாகிகள் தோ்தலில் முறைகேடு நடப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் நீலிக்கொல்லை மசூதியின் நிா்வாகிகள் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அதில் ஒரு தரப்பைச் சோ்ந்தவா்களுடைய வேட்புமனுவை வாங்க மறுப்பதாகக் கூறிய அவா்கள் நடவடிக்கை எடுக்கக் கோரி மசூதி அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த ஆம்பூா் நகரக் காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று பேச்சு நடத்தினா். அதன்பிறகு போராட்டத்தைக் கைவிட்டனா். பின்னா், காவல் நிலையத்துக்குச் சென்று நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் மனு அளித்தனா்.