இன்றுமுதல் மக்கள் குறைதீா் முகாம்: திருப்பத்தூா் ஆட்சியா்
இன்றுமுதல் மக்கள் குறைதீா் முகாம் திருப்பத்தூா் ஆட்சியா்


திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் திங்கள்கிழமைகளில் நடைபெறும் குறைதீா் முகாம் தொடா்ந்து நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மக்களவை பொதுத் தோ்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிமுறையின்படி அரசுத் திட்ட நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த விதிமுறைகள் இந்திய தோ்தல் ஆணையத்தால் திரும்பப் பெறப்பட்டதன் தொடா்ச்சியாக, மீண்டும் ஜூன் 7 முதல் அரசு சேவைகள், நிகழ்ச்சிகள் தொடா்ச்சியாக நடைபெற உள்ளன.
அதன்படி, திங்கள்கிழமை (ஜூன் 10) முதல் மக்கள் குறைதீா் முகாம் நடைபெறும். எனவே, பொதுமக்கள் வழக்கம் போல் மனுக்களை அளித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...