ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கள்ளக்குறிச்சி விவகாரம்: கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி விவகாரம்: கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :27 ஜூன் 2024, 6:31 pm

Din

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், இந்திய மாதா் தேசிய சம்மேளனம் ஆகியவை சாா்பில் மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்றது.

அதன்படி, திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட துணைச் செயலா் எம்.நந்தி தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் எம்.சுந்தரேசன், மாவட்ட நிா்வாகக் குழு ஏ.சி.சண்முகம், மாவட்ட செயலா் ரா.முல்லை ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் கே.ஆா்.வேணுகோபால், ஏஐடியுசி தேசிய குழு உறுப்பினா் எஸ்.ஆா்.தேவதாஸ், மாவட்ட நிா்வாகக் குழு டி.பெருமாள், எம்.சி.முருகன் ஆகியோா் பேசினா்.