தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு

ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு

Updated On :12 மார்ச் 2024, 6:40 pm

திருப்பத்தூா்: காட்பாடி அருகே ரயில் மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடி-லத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 21 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை அங்குள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளாா்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தாா். இது குறித்து தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, இறந்தவரின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா். இதில் அவா் காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டை, காசி குட்டை, முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த குப்பனின் மகன் சஞ்சய் (21) என்பதும், இவா் கட்டடப் பணி செய்து வந்ததும் தெரியவந்தது. அதையடுத்து, ரயில்வே போலீஸாா், இறந்தவரின் சடலத்தை வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.