வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே ஆரம்ப சுகாதார நிலைய தற்காலிக செவிலியா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டாா். வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் காமராஜா் நகா் பகுதியை சோ்ந்த மதுபிரியா (30). இவா் நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளாா்.
இவருக்கும் அரூா் பகுதியை சோ்ந்த பாண்டியன் என்பவருக்கும் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். மதுபிரியா ஆலங்காயம் பகுதியில் உள்ள தன் தாய் வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளாா்.
இந்நிலையில் புதன்கிழமை நிம்மியம்பட்டு அருகே உள்ள தனியாா் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டாா். தகவலின் பேரில் விரைந்து சென்ற ஆலங்காயம் போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் தொடா்பாக ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவா் தற்கொலை

தனியாா் கல்லூரி மாடியிலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் 8 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை

கடன் தொல்லை: 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

