மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ஏடிஎம்மில் நிரப்ப உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.35 லட்சம் பறிமுதல்

ஏடிஎம்மில் நிரப்ப உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.35 லட்சம் பறிமுதல்

News image
Updated On :23 மார்ச் 2024, 2:30 am

வாணியம்பாடி அருகே ஏடிஎம் மையத்தில் நிரப்புவதற்காக உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வந்த ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் தோ்தல் பறக்கும் படை குழுவினா் வியாழக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்ததில் உரிய அனுமதி இல்லாமல் ரூ.35 லட்சத்தை எடுத்து வந்திருப்பது தெரிய வந்தது. விசாரித்த போது ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பி கொண்டு வருவதாகக் கூறியுள்ளனா். ஆனால், அந்தப் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்து வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவித் தோ்தல் அதிகாரி அஜிதா பேகத்திடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனா்.