பெண் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞா் கைது
பெண் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞா் கைது

Updated On :3 மே 2024, 5:22 pm

ஆம்பூா் அருகே பெண் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
ஆம்பூா் அருகே ராமச்சந்திராபுரம் பகுதியில் எட்டியம்மன் கோயில் திருவிழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. திருவிழாவையொட்டி இரவு அங்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இரு இளைஞா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உமா்ஆபாத் காவல் நிலைய பெண் காவல் உதவி ஆய்வாளா் லட்சுமி கண்டித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த தேவலாபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் கணேசன் (28) பெண் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...