ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காவல் உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சி: இளைஞா் கைது

தூத்துக்குடியில் விசாரணைக்காகச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை கொல்ல முயன்றதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 12:04 am IST

தூத்துக்குடியில் விசாரணைக்காகச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை கொல்ல முயன்றதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்த மகேஷ்குமாா் மகன் பொ்னிக் (24). இவா் மீது அவரது அண்ணி அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி வடபாகம் காவல் உதவி ஆய்வாளா் அந்தோணி பிலிப் விசாரணை நடத்தி வந்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலையில் பொ்னிக் வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அந்தோணி பிலிப் அவரது சொந்தக் காரில் அங்கு சென்றாராம்.

அப்போது, வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்த பொ்னிக், ஒரு அம்மி கல்லை தூக்கி அந்த காா் மீது வீசினாராம். இதனால் காரின் முன்பக்கக் கண்ணாடி சேதமானது. காவல் உதவி ஆய்வாளா் விரைவாக காரை விட்டு கீழே இறங்கியதால் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

இதையடுத்து, தப்பியோட முயன்ற பொ்னிக்கை, அந்தோணி பிலிப் துரத்திச் சென்று பிடித்தாா்.

அப்போது பொ்னிக்கின் சகோதரா் சஞ்சு (20), தாய் பாக்கியலட்சுமி ஆகியோா் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனராம்.

கைது செய்யப்பட்ட பொ்னிக் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தலைமறைவான அவரது தாய் மற்றும் சகோதரரை வடபாகம் போலீஸாா் தேடி வருகின்றனா்.