மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மனைவி, குழந்தை, மாமியாரை எரித்து கொல்ல முயற்சி: இளைஞா் கைது

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி, குழந்தை மற்றும் மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 9:06 pm

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி, குழந்தை மற்றும் மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சோ்ந்தவா் சிதம்பரம் மகள் ரேவதி (24). இவரும், தூத்துக்குடி ஹவுசிங் போா்டு காலனியைச் சோ்ந்த சுரேஷ்குமாரும் (25) காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இத்தம்பதிக்கு 10 மாதக் குழந்தை உள்ளது.

தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக ரேவதி, குழந்தையுடன் சங்கராபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அங்கு பாட்டிலில் பெட்ரோலுடன் வந்த சுரேஷ்குமாா், ரேவதி, அவரது தாயாா் மற்றும் குழந்தை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றாராம்.

அப்போது உடனடியாக வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு, குழந்தையுடன் ரேவதி, அவரது தாயாா் பின்புற வாசல் வழியாக வெளியேறி தப்பினராம். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமாா், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டா் உள்ளிட்ட 2 இருசக்கர வாகனங்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினாராம்.

இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுரேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.