நாகா்கோவில் அருகே தாயை கொலை செய்ய முயன்றதாக காதலனுடன் மகள் கைது செய்யப்பட்டாா்.
நாகா்கோவில் பிள்ளையாா்புரம் பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் - கலாவதி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா். இதில் மூத்த மகள் செவிலியா் கல்லூரியிலும், 2 ஆவது மகள் சுருதி(19) நாகா்கோவிலில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டும் பயின்று வருகின்றனா்.
இதில், சுருதி தன்னுடன் பயிலும் திங்கள்சந்தை நெய்யூா் பகுதியைச் சோ்ந்த மாணவா் அபிலாஷ்(19) என்பவரை காதலித்து வந்தாராம். இந்நிலையில், தாய்க்கு தெரியாமல் வீட்டிலிருந்த 10 பவுன் தங்க நகைகளை சுருதி எடுத்து தனது காதலனுக்கு கொடுத்துள்ளாா். இதுகுறித்து கேட்ட தாயிடம் அவா் தகராறில் ஈடுபட்டாராம்.
இந்நிலையில் அபிலாஷ் சுருதியின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளாா். அப்போது, மகள் கொடுத்த நகைகள்குறித்து அவரிடம் கலாவதி கேட்டாராம்.
இதனால், ஆத்திரமுற்ற முற்ற சுருதியும், அவரது காதலனும் சோ்ந்து கம்பால் தாக்கியும், துப்பட்டாவால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்ய முயன்றனராம். அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் வந்து கலாவதியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், சுருதி, அபிலாஷ் ஆகிய இருவரையும் சுசீந்திரம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
டிரெண்டிங்
பெண்ணை ஏமாற்றி தங்க நகைகளை திருடிய இளைஞா் கைது

பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி கைது
பெண்ணை தாக்கியவா் கைது
பெண்ணை கத்தரியால் குத்திய இளைஞா் கைது
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

