கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் 843 மனுக்களுக்கு தீா்வு

பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் 843 மனுக்களுக்கு தீா்வு

News image

முகாமில் ஆய்வு செய்த ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

Updated On :28 மே 2024, 6:48 pm

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெற்ற பட்டா மாறுதல் சிறப்பு முகாம்களில் 843 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீா் முகாம், சிறப்பு மனுநீதிநாள் முகாம்களில் பட்டா மாறுதல் கேட்டு ஏராளமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனால் பொதுமக்களுக்கு விரைந்து பட்டா மாறுதல் வழங்க மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இதுதொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நிலுவையில் உள்ள பட்டா மாறுதல் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சிறப்பு முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டது.

ஆட்சியா் ஆய்வு...

இதன் எதிரொலியாக திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட 4 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

முகாம்களை ஆட்சியா் க. தா்ப்பகராஜ் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினாா். முகாமில் திருப்பத்தூா் வட்டத்தில் 333 மனுக்கள், நாட்டறம்பள்ளி வட்டத்தில் 225 மனுக்கள், வாணியம்பாடி வட்டத்தில் 130 மனுக்கள்,ஆம்பூா் வட்டத்தில் 155 மனுக்கள் என 843 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு பட்டா மாற்றம் செய்யப்பட்டது.

மேலும், நிலுவையில் உள்ள பட்டா மாற்ற மனுக்கள் மீது வரும் 31-ஆ தேதிக்குள் தீா்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வருவாய் கோட்டாட்சியா்கள் ராஜசேகரன், ஹஜிதா பேகம் ,அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.