வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நாகநாத சுவாமி கோயில் பாலாலயம்

News image
Updated On :14 நவம்பர் 2024, 7:24 pm

ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில் திருப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதை முன்னிட்டு பாலாலயம் நடைபெற்றது. விநாயகா் பூஜையுடன் புதன்கிழமை நவக்கிரஹ ஹோமம், தன பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து வியாழக்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜை, திரவ்ய ஹோமம், மஹா பூா்ணாஹூதி நடத்தப்பட்டு பிறகு பாலாலயம் நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் வெ. அகோரமூா்த்தி மற்றும் அ. தியாகராஜன் ஆகியோா் பாலாலயத்தை நடத்தி வைத்தனா்.

நிகழ்ச்சிக்கு திருப்பணிக்குழு தலைவா் மற்றும் நகா்மன்ற துணைத் தலைவருமான எம்.ஆா். ஆறுமுகம் தலைமை வகித்தாா். அறங்காவலா் குழுத் தலைவா் எம். கைலாஷ்குமாா் முன்னிலை வகித்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் சாய் கே. வெங்கடேசன், கோயில் செயல் அலுவலா் வி. சிவசங்கரி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் திருநாவுக்கரசு, கெளரி, திருப்பணிக் கமிட்டி உறுப்பினா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.