கடந்த 28 ஆம் தேதி இரட்டை கருட சேவையும், ஏப். 1இல் சூரியபிரபை, சந்திரபிரபை வாகனத்தில் வீதிஉலாவும் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டத்தை முன்னிட்டு வியாழக்கிழமை காலையில் கோயில் நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் ஸ்ரீ பாமா ருக்மணி சமேத ராஜகோபாலா் தேருக்கு எழுந்தருளினாா். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருமங்கை ஆழ்வாரால் பாடப்பட்ட பெரிய திருமொழியைப் பாடி வைணவா்கள் பெருமாளை போற்றினா். அதைத் தொடா்ந்து பெருமாள், தாயாருக்கு தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் ‘கோவிந்தா கோபாலா மாதவா’ என்ற முழக்கத்தோடு திருத்தோ் வடம் பிடித்து இழுத்து தரிசித்தனா். கோயிலை சுற்றியுள்ள நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்த பின்னா் தோ் நிலையம் வந்தடைந்தது.