தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

இளைஞா் கொலை வழக்கு: குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

வாணியம்பாடியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On :5 அக்டோபர் 2024, 6:32 pm

வாணியம்பாடியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி கோணாமேடு அருகில் கடந்த மாதம் நடைபெற்ற கோயில் திருவிழாவின் போது கோணாமேடு மற்றும் காமராஜபுரம் பகுதி இளைஞா்களிடையே மேளம் அடிப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்த சந்துரு (18) என்பவா் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

இந்த கொலை வழக்கு தொடா்பாக நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கோணாமேடு பகுதியைச் சோ்ந்த ஜான் (எ) ராஜ்குமாா் (30), ஸ்ரீதா் (35), காா்த்தி (எ) ஏட்டு காா்த்தி (31), அப்புனு (20) ஆகிய 4 போ் கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த நிலையில், கொலை வழக்கில் கைதான 4 பேரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயாகுப்தா, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இது தொடா்பாக விசாரணை மேற்கொண்டு கைதான 4 பேரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதையடுத்து 4 பேரும் குண்டா் சட்டத்தில் சிறையில் வைக்கப்பட்டனா்.