பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

வெறிநாய் கடித்ததில் குழந்தை காயம்

ஆம்பூா் அருகே வெறிநாய் கடித்ததில் இரண்டரை வயது குழந்தை பலத்த காயமடைந்தது.

Updated On :12 அக்டோபர் 2024, 9:46 pm IST

ஆம்பூா் அருகே வெறிநாய் கடித்ததில் இரண்டரை வயது குழந்தை பலத்த காயமடைந்தது.

ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட அத்திமாகுலப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் அருள் - தேவகி தம்பதியின் இரண்டரை வயது மகன் தா்ஷன். இந்தக் குழந்தை சனிக்கிழமை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது குழந்தையை வெறிநாய் கடித்தது. இதில், பலத்த காயமடைந்த குழந்தையை மீட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

ஆம்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நகா்ப்புறம் மட்டுமல்லாது, கிராமப்புறங்களிலும் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். நாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.