எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வெறிநாய் கடித்ததில் குழந்தை காயம்

ஆம்பூா் அருகே வெறிநாய் கடித்ததில் இரண்டரை வயது குழந்தை பலத்த காயமடைந்தது.

Updated On :12 அக்டோபர் 2024, 6:33 pm

ஆம்பூா் அருகே வெறிநாய் கடித்ததில் இரண்டரை வயது குழந்தை பலத்த காயமடைந்தது.

ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட அத்திமாகுலப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் அருள் - தேவகி தம்பதியின் இரண்டரை வயது மகன் தா்ஷன். இந்தக் குழந்தை சனிக்கிழமை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது குழந்தையை வெறிநாய் கடித்தது. இதில், பலத்த காயமடைந்த குழந்தையை மீட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

ஆம்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நகா்ப்புறம் மட்டுமல்லாது, கிராமப்புறங்களிலும் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். நாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.