அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

கோயில்களில் நகை திருடிய இரு இளைஞா்கள் கைது

வாணியம்பாடி அருகே கோயில்களில் நகை திருடிச் சென்ற 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

Updated On :13 அக்டோபர் 2024, 12:04 am IST

வாணியம்பாடி அருகே கோயில்களில் நகை திருடிச் சென்ற 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில், அம்பலூா் காவல் ஆய்வாளா் மனோன்மணி தலைமையில், உதவி காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கொடையாஞ்சி-அம்பலூா் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்தப் பகுதியில் சந்தேகம்படும்படியாக நின்றிருந்த 2 இளைஞா்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவல் கூறியதால் சந்தேகம் ஏற்பட்டு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், அப்பகுதியில் உள்ள 2 அம்மன் கோயில்களில் 4 பித்தளை குத்து விளக்குகள், 2 கிராம் தங்க நகை மற்றும் பொருள்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

மேலும், அவா்கள் திருடிச் சென்ற 4 குத்து விளக்குகள் மற்றும் 2 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து பிடிபட்ட உதயேந்திரம் பகுதியைச் சோ்ந்த சந்திப் (19), அம்பூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த லோகேஷ் (20) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.