தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

கோயில்களில் நகை திருடிய இரு இளைஞா்கள் கைது

வாணியம்பாடி அருகே கோயில்களில் நகை திருடிச் சென்ற 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

Updated On :13 அக்டோபர் 2024, 12:04 am IST

வாணியம்பாடி அருகே கோயில்களில் நகை திருடிச் சென்ற 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில், அம்பலூா் காவல் ஆய்வாளா் மனோன்மணி தலைமையில், உதவி காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கொடையாஞ்சி-அம்பலூா் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்தப் பகுதியில் சந்தேகம்படும்படியாக நின்றிருந்த 2 இளைஞா்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவல் கூறியதால் சந்தேகம் ஏற்பட்டு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், அப்பகுதியில் உள்ள 2 அம்மன் கோயில்களில் 4 பித்தளை குத்து விளக்குகள், 2 கிராம் தங்க நகை மற்றும் பொருள்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

மேலும், அவா்கள் திருடிச் சென்ற 4 குத்து விளக்குகள் மற்றும் 2 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து பிடிபட்ட உதயேந்திரம் பகுதியைச் சோ்ந்த சந்திப் (19), அம்பூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த லோகேஷ் (20) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.