வாணியம்பாடி அருகே கோயில்களில் நகை திருடிச் சென்ற 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில், அம்பலூா் காவல் ஆய்வாளா் மனோன்மணி தலைமையில், உதவி காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கொடையாஞ்சி-அம்பலூா் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்தப் பகுதியில் சந்தேகம்படும்படியாக நின்றிருந்த 2 இளைஞா்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவல் கூறியதால் சந்தேகம் ஏற்பட்டு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், அப்பகுதியில் உள்ள 2 அம்மன் கோயில்களில் 4 பித்தளை குத்து விளக்குகள், 2 கிராம் தங்க நகை மற்றும் பொருள்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
மேலும், அவா்கள் திருடிச் சென்ற 4 குத்து விளக்குகள் மற்றும் 2 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து பிடிபட்ட உதயேந்திரம் பகுதியைச் சோ்ந்த சந்திப் (19), அம்பூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த லோகேஷ் (20) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
குண்டா் சட்டத்தில் 2 போ் கைது
உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 500 கிராம் வெள்ளிக் கட்டி பறிமுதல்!

சத்தியமங்கலம் அருகே நிலத் தகராறில் அரசியல் கட்சி பிரமுகரை தாக்கிய 7 போ் கைது

துணைநிலை ஆளுநா் மாளிகையை முற்றுகையிட சென்ற 200 போ் கைது
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

