சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை! சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை

ஆம்பூா் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

Updated On :19 அக்டோபர் 2024, 12:11 am IST

ஆம்பூா் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே ராமாபுரம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் கோதண்டன். இவா், கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி விவசாயிகள் பாதுகாப்பு மற்றும் நலத் திட்ட ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிக்க கரும்பூா் கிராம நிா்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளாா். அப்போது அங்கு குமாரமங்கலம் கிராம நிா்வாக அலுவலரும், கரும்பூா் கிராம நிா்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்த ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த தேவராஜிலு என்பவா் கோதண்டனிடம் ஓய்வூதியம் பெறுவதற்கு பரிந்துரை செய்ய ரூ.2,000 வழங்க வேண்டும் என லஞ்சம் கேட்டு உள்ளாா்.

இதனால் கோதண்டன் இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். பின்னா், அவா்கள் கூறிய அறிவுரைகளின்பேரில் கோதண்டன் தேவராஜிலுவுக்கு லஞ்சம் கொடுக்கச் சென்றாா். அப்போது, தேவராஜிலு ரூ.2,000-ஐ தனது உதவியாளா் செல்வத்திடம் கொடுக்க கூறியுள்ளாா். இதைத் தொடா்ந்து கோதண்டன் ரூ.2,000-ஐ செல்வத்திடம் கொடுத்தபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பிடித்தனா்.

இது தொடா்பான வழக்கு திருப்பத்தூா் தலைமை குற்றவியல் நடுவா் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீா்ப்பு வெள்ளிக்கிழமை கூறப்பட்டது. அதில் நீதிபதி ஓம்பிரகாஷ் லஞ்சம் வாங்கிய தேவராஜிலுவிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீா்ப்பு கூறினாா். மேலும் சிறை தண்டனை பெற்ற தேவராஜிலு பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.