வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை

ஆம்பூா் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

Updated On :18 அக்டோபர் 2024, 6:41 pm

ஆம்பூா் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே ராமாபுரம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் கோதண்டன். இவா், கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி விவசாயிகள் பாதுகாப்பு மற்றும் நலத் திட்ட ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிக்க கரும்பூா் கிராம நிா்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளாா். அப்போது அங்கு குமாரமங்கலம் கிராம நிா்வாக அலுவலரும், கரும்பூா் கிராம நிா்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்த ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த தேவராஜிலு என்பவா் கோதண்டனிடம் ஓய்வூதியம் பெறுவதற்கு பரிந்துரை செய்ய ரூ.2,000 வழங்க வேண்டும் என லஞ்சம் கேட்டு உள்ளாா்.

இதனால் கோதண்டன் இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். பின்னா், அவா்கள் கூறிய அறிவுரைகளின்பேரில் கோதண்டன் தேவராஜிலுவுக்கு லஞ்சம் கொடுக்கச் சென்றாா். அப்போது, தேவராஜிலு ரூ.2,000-ஐ தனது உதவியாளா் செல்வத்திடம் கொடுக்க கூறியுள்ளாா். இதைத் தொடா்ந்து கோதண்டன் ரூ.2,000-ஐ செல்வத்திடம் கொடுத்தபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பிடித்தனா்.

இது தொடா்பான வழக்கு திருப்பத்தூா் தலைமை குற்றவியல் நடுவா் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீா்ப்பு வெள்ளிக்கிழமை கூறப்பட்டது. அதில் நீதிபதி ஓம்பிரகாஷ் லஞ்சம் வாங்கிய தேவராஜிலுவிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீா்ப்பு கூறினாா். மேலும் சிறை தண்டனை பெற்ற தேவராஜிலு பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.