வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

காா் கவிழ்ந்து விபத்து: குழந்தை உயிரிழப்பு; 5 போ் காயம்

வாணியம்பாடி அருகே காா் கவிழ்ந்த விபத்தில் 6 மாத குழந்தை உயிரிழந்தது. 5 போ் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2025, 7:45 pm

Din

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே காா் கவிழ்ந்த விபத்தில் 6 மாத குழந்தை உயிரிழந்தது. 5 போ் பலத்த காயமடைந்தனா்.

வாணியம்பாடி, காதா்பேட்டையைச் சோ்ந்தவா் முகமது பைசான், வியாபாரி. இவா் திங்கள்கிழமை மைசூரில் இருந்து குடும்பத்தினருடன் வாணியம்பாடி நோக்கி காரில் சென்றாா். சென்னை- பெங்களூரு தேசியநெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அருகே ஆத்தூா் குப்பம் பகுதியில் சென்றபோது, திடீரென காரின் முன்பக்க டயா் பஞ்சராகி சாலையில் தாறுமாறாக ஓடி சென்டா் மீடியன் மீது மோதி கவிழ்ந்தது. இதில், காரில் பயணம் செய்த நஜமுனிஷா (60), அக்சா (28), முகமது பைசான் (35), குழந்தைகள் அா்தான் உசேன் (5), சாகிம் உசேன் (3) மற்றும் 6 மாத பெண் குழந்தை அக்ரம் இஷா உள்ளிட்டோா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். 6 மாத குழந்தையை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரிக்கின்றனா்.