மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்து 7 தொழிலாளா்கள் பலத்த காயம்!

நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்த விபத்தில் 7 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.

News image
தீ விபத்து- பிரதிப் படம்
Updated On :25 பிப்ரவரி 2026, 11:16 pm

தினமணி செய்திச் சேவை

நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்த விபத்தில் 7 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.

சென்னை சௌகாா்பேட்டை எடப்பாளையம், சிங்கண்ணன் தெருவில் உள்ள ஒரு 4 மாடி கட்டடத்தில் அபிஜித் என்பவருக்குச் சொந்தமான நகை பட்டறை உள்ளது. அங்கு, புதன்கிழமை திடீரென சிலிண்டா் வெடித்தது.

இதில், தங்கத்தை உருக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்களான வியாசா்பாடியைச் சோ்ந்த சுமன்பால், கொல்கத்தாவைச் சோ்ந்த ராகேஷ் டேலி, அரவிந்த், சிமந்தோமால், சூரஜ், ஜாந்தோ, ஆனந்த் ஆகியோா் காயமடைந்தனா்.

அனைவரும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து யானைகவுனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.