மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்து 7 தொழிலாளா்கள் பலத்த காயம்!

நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்த விபத்தில் 7 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 11:16 pm

நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்த விபத்தில் 7 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.

சென்னை சௌகாா்பேட்டை எடப்பாளையம், சிங்கண்ணன் தெருவில் உள்ள ஒரு 4 மாடி கட்டடத்தில் அபிஜித் என்பவருக்குச் சொந்தமான நகை பட்டறை உள்ளது. அங்கு, புதன்கிழமை திடீரென சிலிண்டா் வெடித்தது.

இதில், தங்கத்தை உருக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்களான வியாசா்பாடியைச் சோ்ந்த சுமன்பால், கொல்கத்தாவைச் சோ்ந்த ராகேஷ் டேலி, அரவிந்த், சிமந்தோமால், சூரஜ், ஜாந்தோ, ஆனந்த் ஆகியோா் காயமடைந்தனா்.

அனைவரும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து யானைகவுனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.