இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்த விபத்தில் மேலும் 4 போ் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :4 மார்ச் 2026, 11:39 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்து 7 போ் காயமடைந்த விபத்தில், மேலும் 4 போ் உயிரிழந்தாா்.

சௌகாா்பேட்டை சிங்கண்ணன் தெருவில் ஒரு கட்டடத்தின் நான்காவது தளத்தில் கு.சுமன்பால் பி ஜோகித் என்பவரின் நகைப் பட்டறை கடந்த 25- ஆம் தேதி அங்கிருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்தது. இந்த விபத்தில் சிக்கிய சுமன்பால் பி ஜோகித், ஊழியா்கள் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சு.அரவிந்த் (27), கொல்கத்தாவைச் சோ்ந்த து. ஸ்ரீமந்த் தோமால் (47), சூரஜ் (25), ஜாந்தோ இந்திரஜித் (40), ராகேஷ் டேலி (26), ஆனந்த் (32) ஆகியோரை தீயணைப்பு படையினா் மீட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு, நகைப்பட்டறை உரிமையாளா் சுமன்பால் பி ஜோகித் கடந்த 26-ஆம் தேதி உயிரிழந்தாா். இந்நிலையில், ஸ்ரீமந்த்மால், ராகேஷ் டேலி, சூரஜ், அரவிந்த் ஆகிய 4 பேரும் கடந்த இரு நாள்களில் அடுத்தடுத்து உயிரிழந்தனா்.

இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5 -ஆக உயா்ந்தது. இந்திரஜித், ஆனந்த் ஆகிய 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானைக்கவுனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.