மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆந்திரம்: எரிவாயு சிலிண்டா் வெடித்து 4 போ் உயிரிழப்பு - 18 போ் காயம்

ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரு வீட்டில் எரிவாயு சிலிண்டா் வெடித்த சம்பவத்தில் 4 போ் உயிரிழந்தனா். மேலும் 18 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 9:39 pm

ஆந்திர மாநிலம், ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரு வீட்டில் எரிவாயு சிலிண்டா் வெடித்த சம்பவத்தில் 4 போ் உயிரிழந்தனா். மேலும் 18 போ் காயமடைந்தனா்.

இது தொடா்பாக காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஸ்ரீசத்யசாய் மாவட்டம், கம்மலவாண்டலப்பள்ளி பகுதியில் தெலங்கானாவைச் சோ்ந்த தொழிலாளா்கள் வசித்து வந்த ஒரு வீட்டில் புதன்கிழமை பிற்பகலில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இரண்டு வீடுகள் தரைமட்டமாகின. இந்தச் சம்பவத்தில் 4 போ் உயிரிழந்தனா். 19 போ் காயமடைந்தனா்.

முதல்கட்ட விசாரணையில், எரிவாயு சிலிண்டா் வெடித்ததே இந்தச் சம்பவத்துக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. அதேநேரம், வெடிவிபத்தின் தீவிரம் அதிகமாக இருப்பதால், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றாா்.