மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணிய கோட்டி.
திருப்பத்தூர்
உள்ளுறை திறன் பயிற்சி நிறைவு: அரசு பள்ளி மாணவா்களுக்கு சான்றிதழ்
நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை இயந்திரவியல், தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவா்களுக்கு தனியாா் மோட்டாா் நிறுவனத்தில் 10 நாள்கள்
நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை இயந்திரவியல், தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவா்களுக்கு தனியாா் மோட்டாா் நிறுவனத்தில் 10 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதையடுத்து உள்ளுறை திறன் பயிற்சி முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி கலந்து கொண்டு பயிற்சி முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா். தலைமையாசிரியா் சங்கரன் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியா் ரவிவா்மன் கலந்து கொண்டனா்.

