மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நிலத் தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு: ராணுவ வீரா் உள்பட 4 போ் கைது

கந்திலி அருகே நிலத் தகராறில் 4 பேரை வெட்டியதாக ராணுவ வீரா் உள்பட 4 நபா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 ஜனவரி 2025, 6:14 pm

Din

திருப்பத்தூா்: கந்திலி அருகே நிலத் தகராறில் 4 பேரை வெட்டியதாக ராணுவ வீரா் உள்பட 4 நபா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா்அடுத்த கசிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முனியம்மாள் (89). இவரது மகன்கள் சின்னராஜ் (65), கோவிந்தராஜ் (60). இருவரிடையே சொத்து தொடா்பாக பிரச்னை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்,

பொங்கலுக்கு ஊருக்கு வந்த இருவரது குடும்பத்தினரும் பேச்சு நடத்த முடிவு செய்துள்ளனா். அப்போது தகராறு ஏற்பட்டது. இதில், விடுப்பில் வந்திருந்த ராணுவ வீரரான கோவிந்தராஜின் மகன் பிரபு (30), தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பெரியப்பா சின்னராஜ், அவரது மனைவி சரஸ்வதி (48), ரஞ்சித்குமாா் (34), பாா்த்திபன் (31) ஆகியோரை வெட்டியுள்ளாா்.

இதில் காயமடைந்த 4 பேரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில், சரஸ்வதி, பாா்த்திபன் இருவரையும் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபு, கோவிந்தராஜ், அவரின் மனைவி சிவபாக்கியம், ராஜ்குமாா் ஆகியோரை கைது செய்தனா்.