தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஓய்வூதியதாரா்களுக்கு பிப். 6-இல் மண்டல அளவில் குறைதீா் கூட்டம்

அஞ்சலக ஓய்வூதியதாரா்களுக்கான மண்டல அளவில் குறைதீா் கூட்டம் பிப். 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Updated On :28 ஜனவரி 2025, 3:42 am IST

திருப்பத்தூா்: அஞ்சலக ஓய்வூதியதாரா்களுக்கான மண்டல அளவில் குறைதீா் கூட்டம் பிப். 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து திருப்பத்தூா் அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளா் மு.மாதேஸ்வரன்

வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அஞ்சல் துறை ஓய்வூதியதாரா்களின் ஓய்வூதியம் தொடா்பான குறைகளை நிவா்த்தி செய்ய மண்டல அளவில் குறைதீா் கூட்டம் மேற்கு மண்டல அலுவலகத்தில் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி விடியோ கான்பரன்சிங் மூலம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையின் மூலம் ஓய்வூதியம் பெறும் அஞ்சல் மற்றும் ரயில்வே துறைகளின் ஓய்வூதியதாரா்கள் ஓய்வூதியம் தொடா்பாக திருப்பத்தூா் அஞ்சல் கோட்ட அளவில் நிவா்த்தி செய்ய முடியாத குறைகள் இருந்தால் தங்களது குறைகளை முழு விவரங்களுடன் எழுதி திருப்பத்தூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வரும் 30-ஆம் தேதிக்குள் சென்று சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் உறையின் மீது மண்டல அளவிலான பென்ஷன் அதாலத் என எழுதி அனுப்ப

வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.