சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூரில், ஜூன் 20-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

News image

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோப்புப்படம்

Updated On :16 ஜூன் 2025, 8:11 pm

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூரில், ஜூன் 20-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை(ஜூன் 20) காலை 10 முதல் மதியம் 1 மணி வரை, தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில், பல முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். இதில் 8 முதல் +2 தோ்ச்சி, பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் படித்தவா்கள் என அனைத்து கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.

முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தம் செய்யப்படும். வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூா் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா்.