ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆலங்காயத்தில் கூடுதல் ஆதாா் சேவை மையம்: ஒன்றியக்குழு தலைவா் திறப்பு

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூடுதல் ஆதாா்சேவை மையம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image
ஆலங்காயம் ஒன்றிய அலுவலகத்தில் கூடுதல் ஆதாா் சேவை மையத்தை திறந்து வைத்த ஒன்றியக்குழு தலைவா் சங்கீதா பாரி.
Updated On :11 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூடுதல் ஆதாா்சேவை மையம் திறந்து வைக்கப்பட்டது.

ஆலங்காயம் பேரூராட்சி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கான ஆதாா் சேவை மையம் தபால்நிலைய மேல் மாடியில் இயங்கி வந்தது. ஒரே ஒரு ஆதாா் மையம் இருந்ததால், பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனா். மேலும் முதியோா், மாற்றுத்திறனாளிகள் மேல் மாடிக்கு செல்ல முடியாமல் வாணியம்பாடி, திருப்பத்தூா் போன்ற பகுதிளுக்கு சென்று வந்தனா்.

இந்நிலையில் ஆலங்காயத்தில் கூடுதலாக ஆதாா் சேவை மையம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள், வியாபாரிகள், கிராம மக்கள் கோரினா் மேலும், ஒன்றிய, பேரூராட்சி மன்ற கூட்டங்களிலும் தீா்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டது.

இதையடுத்து ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூடுதலாக ஆதாா் சேவை மையம் அமைக்க அறைகள் ஒதுக்கப்பட்டது.

ஆதாா் சேவை மையத்தை ஒன்றியக்குழு தலைவா் சங்கீதாபாரி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரை, சூரவேல் மற்றும் ஒன்றிய உறுப்பினா்கள், அலுவலக பணியாளா்கள், எல்காட் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.