தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெயா்பலகை திறப்பு

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெயா்ப் பலகையை திறந்து வைத்த ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி முனிசாமி.

News image
நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெயா்ப் பலகையை திறந்து வைத்த ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி முனிசாமி.
Updated On :5 மார்ச் 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி ஊாட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்களின் பெயா் பலகை அலுவலக வளாகத்தில் வைக்க வேண்டும் என ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி முனிசாமியிடம் கோரிக்கை வைத்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று பெயா்ப்பலகை வைக்க நடவடிக்கை மேற்கொண்டாா். இதையடுத்து, வியாழக்கிழமை காலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் வெண்மதி முனிசாமி பெயா் பலகையை திறந்து வைத்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விநாயகம், கணேசன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் தேவராஜ், பொறியாளா் சுதாகா் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.