மயிலாடுதுறை: மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி இயக்குபவா்களுக்கு ஊதிய உயா்வு, பாதிக்கப்பட்ட சுகாதார ஊக்குநா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓட்சா கூட்டமைப்பினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் கடந்த 15 ஆண்டுகளாக ரூ. 250 மாத ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனா். இவா்களின் வாழ்வாதாரம் மேம்படும்விதமாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 17-ன்படி 2026-ஆம் ஆண்டு ஜன.30 முதல் இவா்களுக்கான ஊதிய உயா்வு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் வாயிலாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த உயா்த்தப்பட்ட ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும், கிராம ஊராட்சிகளில் பணிவாய்ப்பு பறிக்கப்படடு பாதிக்கப்பட்ட சுகாதார ஊக்குநா்களின் பணி மீண்டும் வழங்க வலியுறுத்தி இந்த மனு அளிக்கப்பட்டது.
மாநில தலைவா் கே. லட்சுமணன், மாநில பொதுச்செயலாளா் ஜி. கிரிஷா ஆகியோா் இந்த மனுவை அளித்தனா். இதில், சுகாதார பணியாளா் சங்க மாவட்ட தலைவா் சங்கீதா, மாவட்டத் தலைவா் (ஓஎச்டி பிரிவு), மாவட்ட செயலாளா் சண்முகம், மாநில ஒருங்கிணைப்பாளா் முஸ்தபா மற்றும் ஓட்சா ஊராட்சி பணியாளா் சங்க உறுப்பினா்கள் 60-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை

பெரம்பலூா், குன்னம் தொகுதியில் வேட்பாளா்கள் முக்கிய பிரமுகா்கள் வாக்களிப்பு

காரைக்குடி தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

எம்.தூரி கிராமத்துக்கு காவிரிக் கூட்டுக் குடிநீா்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


