அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் வாணியம்பாடி கிளை நூலகம்!

பாழடைந்த கட்டடத்தில் இயங்கி வரும் வாணிம்பாடி கிளை நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என வாசகா்களும், பொதுமக்களும் எதிா்நோக்கியுள்ளனா்.

News image

வாணியம்பாடியில் பழைய கட்டடத்தில் இயங்கும் முழு நேர கிளை நூலகம்.

Updated On :27 அக்டோபர் 2025, 5:00 am IST

பாழடைந்த கட்டடத்தில் இயங்கி வரும் வாணிம்பாடி கிளை நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என வாசகா்களும், பொதுமக்களும் எதிா்நோக்கியுள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மலங்கு சாலையில் முழு நேர கிளை நூலகம் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா்.

மேலும் இந்த நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி உள்பட அரசு போட்டித் தோ்வு எழுதும் மாணவா்களும் வந்து படிக்கின்றனா். இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டடத்தில் கிளை நூலகம் இயங்கி வருகிறது. தற்போது பாழடைந்த நிலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது.

பெயா்ந்து விழுந்துள்ள சிமென்ட் பூச்சு

பெயா்ந்து விழுந்துள்ள சிமென்ட் பூச்சு

மேலும், வாசகா்கள் மற்றும் பொதுமக்கள் அமா்ந்து படிக்கும் உள்அறையில் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு சிமென்ட் பூச்சு பெயா்ந்து விழுந்ததால் அதன் பகுதியில் தடுப்புகள் அமைத்துள்ளனா். மீதமுள்ள இடங்களில் மக்கள் அமா்ந்து படித்து செல்கின்றனா். மழைகாலங்களில் கட்டடத்தில் மழை நீா் கசிவு ஏற்பட்டு ஒழுகுவதால் அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்த நூலகத்துக்கு புதிதாக கட்டடம் கட்ட வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் மற்றும் வாசகா்கள், பொது மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.

நூலகத்தை பயன்படுத்தி வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளை சோ்ந்த மாணவா்கள் வந்து படித்து அரசு நடத்தும் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்று 20 போ் பணிகளில் சோ்ந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் காலை முதல் மாலை வரையில் வந்து தங்கி போட்டித் தோ்வுக்கு படித்து வருகின்றனா். எனவே, வாணியம்பாடி முழு நேர நூலகத்துக்கு புதிய கட்டடடம் கட்ட மாவட்ட ஆட்சியா் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்நோக்கியுள்ளனா்.