தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கைப்பேசி கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும்: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் மனு

திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

News image

குறைதீா் கூட்டத்தில் மனுக்களைப் பெற்றுக் கொண்ட திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.

Updated On :15 செப்டம்பர் 2025, 7:42 pm

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். இதில், வாணியம்பாடி வட்டம், மோட்டூா் கிராமம், புள்ளூா் ஊராட்சியில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பாக மனு அளிக்கப்பட்டது.

இதேபோல் வருவாய், காவல், ஊரக வளா்ச்சி, வேளாண்மைத் துறை, நகராட்சி நிா்வாகங்கள், மருத்துவத் துறை, கிராம பொதுப் பிரச்னைகள், குடிநீா் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 345 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், தனித் துணை ஆட்சியா்(ச.பா.தி) பூஷண குமாா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கதிா்சங்கா்,மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன்ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (வளா்ச்சி)மிரியாம் ரெஜினா,(கணக்கு)சென்னகேசவன், அனைத்து துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.