மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஜேஏஎல்லை கையகப்படுத்தும் அதானி குழுமம்: என்சிஎல்ஏடி உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்த ரூ.14,535 கோடிக்கு அதானி குழுமம் கோரிய ஏலத்துக்கு தடை விதிக்க மறுத்த தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாய உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

News image

அதானி குழுமம் - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 7:47 pm

ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தை (ஜேஏஎல்) கையகப்படுத்த ரூ.14,535 கோடிக்கு அதானி குழுமம் கோரிய ஏலத்துக்கு தடை விதிக்க மறுத்த தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாய (என்சிஎல்ஏடி) உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜேஏஎல் நிறுவனத்தை அதானி குழுமம் கையகப்படுத்தும் ஏலத்துக்கு ஒப்புதல் அளித்து தேசிய கம்பெனி சட்ட தீா்ப்பாயம் (என்சிஎல்டி) பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, என்சிஎல்ஏடியில் வேதாந்தா குழுமம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. எனினும் ஜேஏஎல் நிறுவனத்தை கையகப்படுத்த அதானி குழுமம் கோரிய ஏலத்துக்கு என்சிஎல்ஏடி தடை விதிக்க மறுத்துவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது வேதாந்தா குழுமத்தின் மனுவை வரும் ஏப்.10-ஆம் தேதி என்சிஎல்ஏடி விசாரிக்க உள்ளதால், ஏலத்துக்குத் தடை விதிக்க மறுத்த அதன் உத்தரவில் நீதிபதிகள் அமா்வு தலையிட மறுத்துவிட்டது.

என்சிஎல்ஏடியின் முன் அனுமதி இல்லாமல் எந்தவொரு முக்கிய கொள்கை முடிவையும் ஜேஏஎல் நிறுவனம் எடுக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.