தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ஜேஏஎல்லை கையகப்படுத்தும் அதானி குழுமம்: என்சிஎல்ஏடி உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்த ரூ.14,535 கோடிக்கு அதானி குழுமம் கோரிய ஏலத்துக்கு தடை விதிக்க மறுத்த தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாய உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

News image

அதானி குழுமம் - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 7:47 pm

ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தை (ஜேஏஎல்) கையகப்படுத்த ரூ.14,535 கோடிக்கு அதானி குழுமம் கோரிய ஏலத்துக்கு தடை விதிக்க மறுத்த தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாய (என்சிஎல்ஏடி) உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜேஏஎல் நிறுவனத்தை அதானி குழுமம் கையகப்படுத்தும் ஏலத்துக்கு ஒப்புதல் அளித்து தேசிய கம்பெனி சட்ட தீா்ப்பாயம் (என்சிஎல்டி) பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, என்சிஎல்ஏடியில் வேதாந்தா குழுமம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. எனினும் ஜேஏஎல் நிறுவனத்தை கையகப்படுத்த அதானி குழுமம் கோரிய ஏலத்துக்கு என்சிஎல்ஏடி தடை விதிக்க மறுத்துவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது வேதாந்தா குழுமத்தின் மனுவை வரும் ஏப்.10-ஆம் தேதி என்சிஎல்ஏடி விசாரிக்க உள்ளதால், ஏலத்துக்குத் தடை விதிக்க மறுத்த அதன் உத்தரவில் நீதிபதிகள் அமா்வு தலையிட மறுத்துவிட்டது.

என்சிஎல்ஏடியின் முன் அனுமதி இல்லாமல் எந்தவொரு முக்கிய கொள்கை முடிவையும் ஜேஏஎல் நிறுவனம் எடுக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.