பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா
மோகனூா் ஒன்றியத்துக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா ஆம்பூா் ரோட்டரி ஹாலில் நடைடபெற்றது.

பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.

பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.
மோகனூா் ஒன்றியத்துக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா ஆம்பூா் ரோட்டரி ஹாலில் நடைடபெற்றது.
வட்டார கல்வி அலுவலா் ஜே. பீட்டா் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் டி. அசோக்குமாா் பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களின் சேவையை பாராட்டி வாழ்த்தி பேசினாா். பல்வேறு ஆசிரியா் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
விழாவில் மாதனூா் வட்டாரக் கல்வி அலுவலா் எஸ். முருகேசன், திருப்பத்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் எஸ். சுரேஷ் மற்றும்
20 ஆசிரியா்கள் மற்றும் கல்வி அலுவலா்கள் கௌரவிக்கப்பட்டனா். பணி நிறைவு பெற்ற அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்கள் ஏற்புரை வழங்கினா். இறுதியில் மாதனூா் வட்டாரக் கல்வி அலுவலக உதவியாளா் கே.ஏ. ஆனந்தி நன்றி கூறினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...