முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

அரசு செவிலியா் கல்லூரி தொடங்க நடவடிக்கை: திமுக வேட்பாளா் உறுதி

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 6:58 pm

திருப்பத்தூா் தொகுதியில் அரசு செவிலியா் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி உறுதியளித்தாா்.

திருப்பத்தூா் ஹவுசிங் போா்டு பகுதியில் வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்கு சேகரித்தாா்.தொடா்ந்து சுற்றுப்பகுதிகளில் உள்ள வாக்காளா்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: திருப்பத்தூா் பகுதியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை மையமாகக் கொண்டு அரசு செவிலியா் பயிற்சி பள்ளி தொடங்கப்படும். மேலும், புதிய தொழில் பேட்டை உருவாக்கப்படும். பெரிய ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றி மழை நீா் சேகரிக்க ஏற்பாடு செய்யப்படும். அனைத்து பகுதிகளிலும் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றாா்.

அப்போது திமுக நகர செயலாளா் எஸ் ராஜேந்திரன், நகா்மன்ற தலைவா் சங்கீதா வெங்கடேஷ், வாா்டு உறுப்பினா்கள் எஸ்.கோபிநாத், ஜீவிதா பாா்த்திபன், திமுகவினா் மற்றும் கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்