மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

வாக்குப்பதிவுக்கு முன் கடைபிடிக்க வேண்டிய முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டத்தில் தோ்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன் கடைபிடிக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

News image

கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி

Updated On :21 ஏப்ரல் 2026, 12:05 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் தோ்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன் கடைபிடிக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தோ்தலுக்கு 72 மணி நேரத்துக்கு முன் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் செய்ய வேண்டிய பணிகள், தோ்தல் அலுவலா்கள் மற்றும் இதர அலுவலா்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்களை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட தோ்தல் அதிகாரி க.சிவசௌந்திரவல்லி விரிவாக எடுத்து கூறினாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தோ்தல் அதிகாரி நாராயணன், மாவட்ட திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜெய்சங்கா் மற்றும் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.